Sunday, October 17, 2010

வெள்ளை நிறத்திலொரு விஷம்

சலனமற்று சுவர்பார்த்து
துயிலவே பிடிக்கிறது
சுவரில் தெரியும் காரையும்
வெள்ளையும் சித்திரமாக
விரிந்து தினம் கதை சொல்லி
தூங்கசெய்யும் சுகம் பிடித்ததால்

என்னை விழுங்கவரும்
முதலையாக ஒருநாள்

மேகத்தில மிதக்கும்
ராணியாக நானும் ஒருநாள்

நதியிலே கரை தேடி
மரக்கட்டையாக மாறிய நான்

வெள்ளைதவிர வேறு நிறம்
அன்னியமானது ...
சுவரின் வெள்ளை உதிரும்போது
கனவின் நிறமும் வெளிருமோ?
விஷமாக தூவும் வெள்ளை
சலனமற்று வெறிக்கிறது
சுவர்பார்த்து தூங்கும் என்னை ......