Friday, October 8, 2010

உடன்வா.............

குறுக்கு நெடுக்கான கோடுகளில்
வாழ்க்கை வாழச்சொல்கிறது 
நீளக்கோட்டில் முடிவைத்தேடி .
வளைவுகளில் திடுக்கிட்டு,
ஏற்றங்களில் மனமினித்தும்,
இறக்கங்களில் இரக்கமற்றும்
பாதையோர விமர்சனங்களால் 
வரையறுக்கப்பட்டு,
எதிரும் உடனும் வரவேற்றோ
விலகிச்சென்றோ
குழிகளுக்கு தப்பி
தாண்டி வாழ பழகுகிறேன்,

நீயும் உடன் வந்தால் ..........


8 comments:

Radhakrishnan said...

உடன் வராவிட்டால் வாழ இயலாதா? ஆம் வாழ இயலாது.

தன்னம்பிக்கை இல்லாது போனால் மிகவும் கடினம்தான்.

VELU.G said...

அருமையான நடை

ரோஜா said...

நன்றி ராதாகிருஷ்ணன்...

ரோஜா said...

நன்றி வேலு.ஜி வருகைக்கும் வாழ்த்துக்கும்

Anonymous said...

பளிச்சென்று பத்து வரி கடைசி வரியில் காதலின் எதிர்பார்போடு,,,

ரோஜா said...

நன்றி தமிழ் :)

rmkgreat said...

அருவத்தை
உருவத்துள்
அடக்கும்அற்பப் பிறவியில்
இந்த சர்கஸ்
வேலையெல்லாம்
செய்ய வேண்டியதிருக்கிறது

ரோஜா said...

RMK.. உங்க கமெண்ட் எனக்கு புரியலை :(

Post a Comment