வர்ணஜால கனவுகளை தூவுகிறதுகால்பற்றியிழுக்கும் உணர்வுகளை
முடிகோதி உள்ளிழுக்கும்,
பயப்போர்வை படரும் போது
கைநீட்டி தேடி அலைகிறேன்
மேலுதட்டில் துளிர்க்கும்
தேன்வியர்வையை மறந்து
திடுக்கிட்டு விழிக்கிறேன்
கருவண்ணம் பழகி கண் துழாவி
உற்று நோக்கும் போது
உள்ளிருந்து சிரிக்கிறாய்,
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்.......
8 comments:
கவிதை தூள்.என்னைக்கவர்ந்த வரிகள்
>>>
மேலுதட்டில் துளிர்க்கும்
தேன்வியர்வையை ...
......>>>
தொடரட்டும்
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
//உற்று நோக்கும் போது
உள்ளிருந்து சிரிக்கிறாய்,
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்.......//
தேன் வியர்வையைப் போலவே திகட்டவேயில்லை கவிதை உள்ளிருக்கும் காதல் உருத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் உருக்குலைவதில்லை காதல் மட்டும்
நன்றி செந்தில் குமார், வருகைக்கும் வாழ்த்துக்கும் ...
நன்றி R..M.K :)
நன்றி தமிழரசி மேடம் ...
அருமையா இருக்கு
நன்றி உழவன், வருகைக்கும் வாழ்த்துக்கும்
Post a Comment